******************** கடம்பூர் கோயில்: 2015

Friday, August 28, 2015

கடம்பூர் கோயிலில் ஆடல்வல்லானுக்கு ஆவணி மாத திருநீராட்டல்


சிவன் நீராட்டுப் பிரியன் என்பது ஊரறிந்த விஷயம். அதிலும் நடராஜருக்கு அபிஷேகம் என்பது ஆனந்தத் தாண்டவம்தான். சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடப்பது போன்று அதே நாளில் அனேக சிவன் கோயில்களில் நடராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். கடம்பூர் திருக்கோயிலிலும் நேற்று ஆவணி மாத திருநீராட்டல் நடைபெற்றது. காட்டுமன்னார்கோயில் சொர்ணம் ஜவுளிக்கடை உரிமையாளர்-திரு.அன்பழகன் அவர்கள் உபயமாக நடைபெற்றது.
அவரது மகன் திரு அறிவழகன் Arivazhagan Anbazhagan அவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டார்.






















Friday, July 10, 2015

குருபெயர்ச்சி முன்னிட்டு கடம்பூர் கோயிலில் தென்முக நாதருக்கு சிறப்பு பூசைகள்

கடம்பூர் கோயிலில் 5.7.2015 அன்று வியாழன் நகர்வு- முன்னிட்டு தென்முகநாதருக்கு சிறப்பு பூசனைகள் காலை முதல் நடந்தேறின.காலை சிறப்பு திருநீராட்டலும் , இரவு 8.00 மணி தொடங்கி யாக வேள்வியும், அதனை தொடர்ந்து திரவியங்களால் திருநீராட்டலும் , அலங்காரமும் செய்யப்பட்டு இரவு 11.02மணிக்கு தீப ஆராதனைகளும் நடைபெற்றன. இரவு நேரமான போதிலும் அதிக அளவில் பக்தர்கள் குழுமி இருந்தனர். அனைவருக்கும் சுவாமிக்கு நிவேதித்த நிவேதனங்கள் வழங்கப்பட்டன. இந்த யாக வேள்வி, மற்றும் சிறப்பு திருநீராட்டல் பணிகளை திரு.பாலகணேசகுருக்கள் செய்வித்தார்.































Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget