******************** கடம்பூர் கோயில்: June 2013

Sunday, June 23, 2013

கடம்பூரில் குறைவிலா நாள் பூசை -ஜூன் 21

 நஞ்சுண்ட சிவன் தனது மயக்கம் தீர தாண்டவம் ஆடுகிறான், அவன் காலடியில் தேவாதி தேவர்கள் எல்லாம் கூடி நின்று பயபக்தியுடன் வணங்கி நிற்கின்றனர். அந்த நாள் யாதொரு குறையிலா நாள் (பிரதோஷநாள்)


 இந்நாள் கடம்பூரில் பிற தலங்களைவிட ஒரு படி மேல் ....யாதெனில் அமுதமே உருவமாய் நின்று அருள் பாலிக்கும் அமிர்தகடேசுவரர் . மேலும் பெருமை சேர்ப்பது ஆயிரம் ஆண்டுகட்குமுன் ராஜேந்திர சோழனின் வெற்றி சின்னமாய் எடுத்துவரப்பட்ட 
தச புஜரிஷப தாண்டவமூர்த்தி எனப்படும் ஏறுகொண்ட பைந்தோள்ஆடல்வல்லான் ஐம்பொற்சிலைஆகும் 


 வழமைபோல் வாசனாதி திரவியங்கள் கொண்டு திருநீராட்டல் பெற்ற சிவ வடிவம் இடபத்தின் மீதேறி பிரகார உலா வரும் காட்சியினை கண்டு களியுங்கள்










கடம்பூரில் கால் வைத்தாலே முக்தி............ தேவரும், முனிவரும்,சோழ மன்னரும், நாயன்மாரும் ,எண்ணற்ற அடியார்களும் வணங்கி மகிழ்ந்த அமுதசிலை யானை நாமும்  வணங்கி முக்தி பெறுவோம் .
இதுநாளில் அன்னம்பாலிப்பு செய்ய அறங்காவலர் 9842676797,
அல்லது அர்ச்சகர் 04144-264638 என்ற இலக்கத்தில் அழையுங்கள்

Monday, June 17, 2013

கடம்பூர் கோயிலில் உழவாரப்பணி

 என் கடன் பணிசெய்து கிடப்பதே - என அப்பர் பெருமான் பணிசெய்து பாடிபரவிய தலம் திருக்கடம்பூர் காட்டுமன்னார் கோயிலின் தென்மேற்கில் ஆறு கி.மி தூரத்தில் உள்ளது
இத்தலத்தில் வருடம்தோறும் காட்டுமன்னார்கோயில் சிவனருள் திருக்கூட்டத்தினர் ஓர் மாதத்தில் மூன்றாம் ஞாயிறு அன்று தூய்மை படுத்தும் பணியினை செய்து வழிபாடு செய்வதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர்.





 அது சமயம் கோயிலுக்கு நமது முக நூல் நண்பர். திரு. சிவப்பிரகாசம் அவர்கள் தமது துணைவியாரோடு கோயில் தரிசனம் செய்ய வந்திருந்தமை கண்டு மிக்க மகிழ்வுற்றேன்.





 அறுபது வயதிலும் கோபுரத்தின் மீதேறி சிவதொண்டு புரியும் இவ்வடியார்க்கும் அடியேன் நான்



 பணிமுடித்து சிறு கலந்துரையாடல் , அதன் பின் சிவபுராண முழக்கத்துடன் வழிபாடு.

Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget