******************** கடம்பூர் கோயில்: July 2011

Sunday, July 31, 2011

மூக்கரு விநாயகர் கோயில்



 கடம்பூரின் தெற்கு எல்லையில் அமைந்துள்ளது இநத மூக்கரு விநாயகர் எனும் ஆலயம் பல்லாண்டுகளாக வயல் வெளியில் ஒரு மேடை மீது இருந்த சிலையினை  திரு.சிவசுப்ரமணியன் எனும் ஆசிரியர் இதற்கு ஒரு தேர் வடிவ கோயிலை நிர்மாணித்து குடமுழுக்கு செய்வித்தார்








இன்றளவும் இப்பகுதி மக்களின் அன்பிற்கும் நினைவிற்க்கும் உரிய தெய்வமாக விளங்குகிறார்.








Wednesday, July 27, 2011

கடம்ப மரமும் அதன் பூக்களும்


கடம்ப மரம்  பரவலாக இந்தியாவெங்கும் காணப்படுகிறது இருந்தபோதிலும் மேற்கு கடற்கரை ஒட்டிய பகுதிகளிலும், கர்நாடகத்திலும்அதிகம் காணப்படுகிறது.






 இரண்டு அங்குல உருண்டை வடிவத்தில் பூக்கிறது.
 பூ உதிர்ந்தவுடன் அதன் உள்ளே இருக்கும் விதை பகுதி

 இப்பூவினை அழகுக்காகவும் இறைவனுக்கு சூட்டவும் பயன்படுகிறது.





கடம்ப மரம் பலகை மற்றும் பென்சில் செய்ய பயன் படுகிறது."உடம்பை முறித்து கடம்பில் போடு" என்னும் சொலவடை மூலம்  கடம்பு  கட்டிலில் படுத்த்தால் சுகமான உறக்கம் வரும் என அறியலாம்









Tuesday, July 19, 2011

செப்பு கவசம் உருவாதல்




 செப்பு கவசம் கடம்பூர் அமிர்தகடேஸ்வரர்
திருமேனிக்கு செய்யப்படுகிறது செப்பு தகடுகள்
திருமேனியின் அளவுக்கு வெட்டப்பட்டு
வளைக்கப்பட்டு சூடுபடுத்தி பற்றவைக்கபடுகிறது



இதன் பின்னர் மெல்லிய பட்டைகள் பொருத்தி பூவேலைப்பாடுகள்
செய்யப்படும் அதன் பின்னர் வெள்ளி பூச்சு பூசப்படும்







கும்பகோணம் தாராசுரம் பகுதியை
சேர்ந்த மகாலிங்க பத்தர் மற்றும்


 அவரது உதவியாளர்கள் பணி செய்வதை காணலாம்
 மூன்று மாத உழைப்பின் பின்னர் செப்பு கவசம் உருவாகியது. பின்னர் இதற்கு வெள்ளி முலாமிடப்பட்டு எம்பெருமானுக்கு சார்த்தப்படும்.



 


Friday, July 1, 2011

அமிர்தகடேச்வரருக்கு வெள்ளி கவசம்

ஸ்ரீஅமிர்தகடேச்வரருக்கு 3 கிலோவில் வெள்ளி கவசம் தயார் செய்யப்படுகிறது முதலில் அளவு எடுத்து வெள்ளி தகட்டில் கவசம் தோராயமான அளவுகளுடன் கொண்டுவரப்பட்டு பொருத்தி பார்க்கப்பட்டது

 ஸ்ரீஅமிர்தகடேச்வரருக்கு 3 கிலோவில் வெள்ளி கவசம் தயார் செய்யப்பட்டு .பின்னர் நகாசு வேலைகள் செய்யப்பட்டு திரு. மணிரத்தினம் உபயதாரர் அவர்களின் மகன் அதனை கோயிலில் இறைவனுக்கு அர்ப்பணித்தார்.வெள்ளி கவசம்

Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget