******************** கடம்பூர் கோயில்: August 2011

Sunday, August 28, 2011

கடம்பூர் அமிர்தகடேசுவரருக்கு வெள்ளிஅங்கி சாற்றுதல்


 கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வந்த

வெள்ளிஅங்கி பணி சென்ற வாரம் நிறைவு பெற்று

28.8.2011 ஞாயிறு அன்று காலை ஒரு கால பூசையுடன்
ஆரம்பிக்கப்பட்டது


 தில்லை அந்தணர்கள் வேதம் ஓத வேள்வி நடைபெற்றது


 காட்டுமன்னார்குடி பொறியாளரும் ,நவசக்தி டவுன் ஷிப் டெவலப்பர் நிறுவன தலைவரும்,ராஜிவ்காந்தி கல்வி குழும தலைவருமான திரு. மணிரத்தினம் அங்கி  செய்வதன்  முழு செலவினை ஏற்று சிறப்பித்தார் . இன்று அவரது மகன் அதனை குருக்களிடம் ஒப்படைத்தார்

 பழைய வெள்ளி அங்கியில் அம்மையும் புதிய அங்கியில் எம்பெருமானும் காட்சி கொடுத்து அருள் பாலித்தார்


திரு.ராமலிங்கம் செட்டியார் , சிதம்பரம் முருகன் ஜுவல்லரி அதிபர் மூலம் செய்யப்பட்டது

Monday, August 8, 2011

சுந்தர பெருமான் குருபூசை

 அறுபத்து மூன்று நாயன்மார்களில் சுந்தரர் முக்கியமானவராக கருதப்படுகிறார்.6 -ம் திருமுறையில் இவரது பாடல்கள் தொகுக்கபட்டுள்ளது.கடம்பூரை பற்றி ஊர்தொகையிலும் ,ஆறாம் திருமுறையிலும் பாடியுள்ளார்




 இவர் முக்தியடைந்த நாளே குருபூசையாக கொண்டாடப்படுகிறது.






 இதனை ஒட்டிகடம்பூரிலும் இவருக்கு சிறப்பு நீராட்டுதல் ,ஆராதனை நடைபெற்றது.

கடம்பூர் பட தொகுப்பினை சொடுக்கவும்

Sunday, August 7, 2011

திருவிளக்கு பூசை



 கடந்த ஆடி மூன்றாவது வெள்ளி அன்று கடம்பூர் கோயிலில் அறுபதுக்கும் மேற்ப்பட்டோர் திருவிளக்கு பூசையினை மேற்கொண்டனர் ,முன்னதாக காலையில் கணபதி பூசை நடை பெற்றது





திருமகளே குத்து விளக்காக -திரு.பாலாஜி குருக்களின் அலங்காரம்




நிறைவாக புடவை பரிசளித்தல் மற்றும் தீபாராதனை. (கூடுதல் படங்களுக்கு  கடம்பூர் பட தொகுப்பினை சொடுக்கவும்)விளக்கு பூஜை

Tuesday, August 2, 2011

ஆடி பூரம் விழா





 கடம்பூர் கோயிலில் ஆடி பூர தினமான இன்று

அம்பாளுக்காக சிறப்பு வேள்வி செய்து புனித

கலச நீரை அம்பாளுக்கு நீராட்டல் செய்து பின்

சந்தனக்காப்பு இட்டு விசேட பூசைகள்

நடைபெற்றன.





Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget