உபசாரங்கள் மூன்று விதம் : ஸாங்கம், உபாங்கம், ப்ரத்யங்கம். (1) ஸாங்கம் : திரு நீராட்டல் (அபிஷேகம்), பாத்யம், ஆசமனம், வஸ்திரம், ஆபரணம், வாஸனை, சந்தணம் பூசுதல், அர்க்யம், புஷ்பம் சாத்துதல் (2) உபாங்கம் : தூப-தீபம், பூசை யின் போது காட்டுதல் விபூதி சாத்துவது, குடை, சாமரம், கண்ணாடி, ஆகியவற்றை காண்பித்தல் (3) ப்ரத்யங்கம் : நிவேதனம்செய்தல், ஸ்ரீபலி, ஹோமம் செய்தல், நித்யோத்ஸவம், சுருகோதகம், ஸ்வஸ்திவாசனம்.
இவற்றில் திருநீராட்டலின் முன் கற்படிமங்களுக்கு நல்லெண்ணெய் கொண்டு மெழுகுதல் சிறப்பு, இதனால் கற்படிமங்களின் சக்திநிலை குறையாமலிருக்கும். கல்லின் ஆயுளும் நீடிக்கும்
ஆகவே ஒவ்வொரு தமிழ் மாதபிறப்பன்றும் கடம்பூர் கோயிலின் அனைத்து கற்படிமங்களுக்கும் நல்லெண்ணெய் சாத்துபடி செய்வது வழக்கம். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொருவரின் உதவியினால் நடத்தபெறுகின்றது.
எண்ணை சார்த்தப்பட்டு திருநீராட்டல் முடிந்து சிறப்பு பூசனைகளும் நடைபெறும்