தமிழ் மாத பிறப்பு தோறும் கடம்பூர் கோயிலில் அனைத்து இறை படிமங்களுக்கும் நல்லெண்ணெய் சார்த்தி நீராட்டல் செய்து சிறப்பு பூசைகள் நடைபெறும் ,அவ்வாறே ஆவணி பிறப்பினை முன்னிட்டு பூசைகள் நடைபெற்றன.
மாதப்பிறப்பன்று மட்டும் ஆயிரத்து எட்டு ருத்திராக்ஷம் கொண்ட மாலை அணிவிக்கப்படும் , மேலே ஏழாயிரம் கொண்ட ருத்ராக்ஷ பந்தல் உள்ளது
எம்பெருமானை முக்கோடி தேவர்களும், ஆயிரம் தலை நாகமும் சூழ நிற்கும் காட்சி