கடம்பூர் கோயிலில்சித்திரை முதல் நாள் முன்னிட்டு காலை முதல் சிறப்பு வழிபாடு நடைபெற்றது , மாலை பஞ்சாங்கம் எனப்படும் ஐந்தொகுதி நூல் வாசிக்கப்பட்டது.
இன்றைய ஐந்தொகுதி நூல் வசிக்கும் நிகழ்வினை மேலணிக்குழி திரு.சம்பந்தம் அவர்கள் ஏற்று போற்றினார்கள்.
இன்று துவங்கும் வருடம் "விஜய" எனும் வருடமாகும் இது தமிழ் வருடமா? அல்லது சம்ஸ்கிருத வருடமா? என்பதனை வாசிக்கும் உங்கள் யூகத்திற்கு விட்டுவிடுவோம்
வருடத்தி முதல் நாள் இது போன்று புதிய மனோன்மணி நிறுவன "பாம்பு" ஐந்தொகுதி நூலினை வாசித்தல் இக்கோயில் மரபு, இவ்வருடமும் வழமை போல் நூலுக்கு பூசை செய்யப்பட்டு வாசிக்கப்பட்டு, வந்திருந்த அன்பர்களுக்கு நீர்மோர் , பானகமும் இதர நிவேதனங்களும் வழங்கப்பட்டன.