******************** கடம்பூர் கோயில்: திருஞானசம்பந்தர் முக்தி நாள்

Wednesday, June 6, 2012

திருஞானசம்பந்தர் முக்தி நாள்



 சீர்காழி எனும் தலத்தில் சிவபாதஇருதையர் ,பகவதியார் எனும் தம்பதியினர் மகனாகஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்  பிறந்தவர் , சிவனருளால் ஞானப்பால் உண்டு இறை பதிகம் பாட தொடங்கி அக்குழந்தை பாடிய பாடல்கள் எவ்வளவு தெரியுமா? சுமார் 42000 பாடல்கள்.கிடைக்கபெற்றவை நான்காயிரம் மட்டுமே



 இவரின் பதிகங்கள் முதல் மூன்று திருமுறைகளாக தொகுக்கப்பட்டுள்ளன. இவை திருக்கடைக்காப்பு என அழைக்கபடுகிறது.
இவரின் பதினாறாம் வயதில் மணம் முடிக்கும் தருணத்தில் இறைவன் சோதியில் தோன்றி உற்றார் உறவினரோடு சோதியில் ஐக்கியமாகி தம்மை வந்தடையுமாறு   கூற அவ்வண்ணமே இறைநிலை அடைந்த நாள் இன்று






 இவரின் முக்தி நாள், இவர் பாடி பரவிய தலமான திருக்கடம்பூர் எனும் மேலக்கடம்புரில் சிறப்பாக கொண்டாடபட்டது, சுட்டுவிரல் நீட்டி தாளமிட்டு ஆடும் திருமேனிகளுக்கு சிறப்பு நீராட்டல் நடைபெற்றது.முதன்மை குருக்களின் மைந்தர் திரு.பாலகணேசகுருக்கள் நடத்தி வைத்தமை இங்கே காட்சிகளாக....






Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget