******************** கடம்பூர் கோயில்: ஆனி உத்திர திருநீராட்டல்

Tuesday, June 26, 2012

ஆனி உத்திர திருநீராட்டல்

 ஆடல்வல்லானுக்கு வருடத்தில் ஆறு முறை திருநீராட்டு விழா நடைபெறும்.சிவாலயங்களில் நடராசருக்கு நடத்தப்பெறும் நீராட்டு விழாக்களில் சிறப்பான விழாக்கள் இரண்டு. ஒன்று மார்கழித்திருவாதிரை. மற்றொன்று ஆனி உத்திர நட்சத்திரத்தன்று நடக்கும் திருமஞ்சனம். இவ்விரு நாட்களில் மட்டுமே அதிகாலையில் திருநீராட்டல்  நடக்கும். சித்திரை திருவோணம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மாசி சதுர்த்தசி ஆகிய நாட்களில் மாலைநேரத்தில்  திருநீராட்டல் நடத்தப்படும்





 இன்றையதினம் கடம்பூரில் யாகபூசையுடன் துவங்கிய திருமஞ்சன நிகழ்ச்சி கல்லுக்கும் கலவைக்கும் நீராட்டலும் மலர் ஒப்பனையும் நடைபெற்றது.









நால்வருடன் நடராசன் -சிவகாமி

கற்சிலையாய் கடம்பூரில்





 இன்றைய ஆனி திருமஞ்சன விழா இரண்டாவது அறங்காவலர் திரு.செல்வமணி குடும்பத்தினர் உபயமாக நடைபெற்றது.

  இன்றைய தினத்தில் தான் உலகெங்கும் உள்ள  நடராசர் சன்னதிகளில் ஆனித்திருமஞ்சனம் நடக்கிறது. பக்தர்கள் நடராசரைத் தரிசித்து தங்கள் வேண்டுதலை வைக்க ஆனித்திருமஞ்சனம் மிக நல்லநாள். கலையார்வம் மிக்க மாணவர்கள் இன்றைய தினம் அவசியம் தரிசனம் செய்து நற்பலன் பெறுவீர்.
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget